கோவில்பட்டியில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் தொடங்கியது
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். மொத்தம் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 27 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் கோடை காலங்களில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. 14 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் அனுபவமுள்ள மூத்த வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வீரர்களுக்கு புதிய நுணுக்கங்கள், போட்டிகளுக்கு தயாராவது குறித்தும் , ஆக்கி விளையாட்டின் மூலம் உயர்கல்வி படிப்பது போன்ற வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் முன்னாள் இந்திய வீரர், தேசிய வீரர் ஆகியோர்களை கொண்டு இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.
இந்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா,ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன், மூத்த வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், மோகன், காளிதாஸ், தனசேகரன் , மாசாணம் , மாயாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி முகாம், கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மே 3ம் தேதி வரை நடைபெறும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தினமும் காலையும் மாலையும் பால் , முட்டை, வாழைப்பழம், முளைத்த பயிர் ஆகியவை வழங்கப்படும்.
முன்னாள் இந்திய வீரர்கள் முகமது ரியாஸ் , அஸ்வின் ஆகியோரும் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி என்பதை பற்றி வீரர்களுக்கு மனநல நிபுணர் பாலாஜி தலைமையில் வகுப்பு நடைபெறும் பயிற்சியாளர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், விபின் காந்த், கவுதமன் மணிகண்டன் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.
இறுதி நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்