கோவில்பட்டியில் மே தின உறுதிமொழி ஏற்பு
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மே தின விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
“சம வேலைக்கு சம ஊதியம், பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு, பாலின சமத்துவம், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாப்பது “என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் அபிராமி முருகன், உலக திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் க.கருத்தப்பாண்டி, முத்துச்செல்வம், ஜெயா ஜனார்த்தனன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில்குமார்,ஐ. என். டி. யு. சி. நிர்வாகிகள் ராஜசேகரன், துரைராஜ், மகேந்திரன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிசீலா, ஆனந்தி, வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜன், வழக்கறிஞர் முத்துக்குமார், ஆவல்நத்தம் லட்சுமணன், ஜெய் பீம் தாவீதுராஜா, தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஐயப்ப பக்தர்கள் யாகசங்கமம் பொண்ணுதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.