கோவில்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகaம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொறுப்பாளர் ஆ.செண்பகராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் முன்னிலை வகித்தார்,
மனிதநேய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கயத்தார் அஸ்மத் நீர்- மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், சுபேதார் கருப்பசாமி, ஐ. என். டி. யு. சி.நிர்வாகிகள் துரைராஜ், மகேந்திரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், ஆவல்நத்தம் லட்சுமணன், வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்புலிகள் கட்சி வழக்கறிஞர் பீமராவ், மற்றும் ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, மனிதநேயம் மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.