கோவில்பட்டி ஆசியா கேண்டி சார்பில் பக்கெட் கடலைமிட்டாய் அறிமுகம்
கோவில்பட்டி ஆசியா கேண்டி நிறுவனத்தின் சார்பில் முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய பக்கெட்களில் ஒரு கிலோ பக்கெட் கடலை மிட்டாய் அதிகபட்ச விலைரூ 299 க்கும், பக்கெட் சம்பா அவல் மிக்ஸர் அதிகபட்ச விலைரூ 245க்கும் மே-9முதல் விற்பனைக்கு வர உள்ளது.
ஆசியா கேண்டி நிறுவன வளாகத்தில் நடந்த அறிமுக கூட்டத்திற்கு தமிழ்ச்செம்மல் விருதாளர் நம் .சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கணேஷ் பேக்கரி உரிமையாளர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
ஆசியாகேண்டி உரிமையாளர் பாபு அனைவரையும் வரவேற்றார்.
ஒரு கிலோ பக்கெட் கடலைமிட்டாயை டாக்டர் பெலிக்ஸ் மரி ஆஞ்சலோ, பக்கெட் சம்பா அவல் மிக்ஸரை கோவில்பட்டி திருவள்ளுவர்மன்ற தலைவர் கருத்தபாண்டி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி, டாக்டர் அலாய்சியா பாபு,தொழிலதிபர் நல்லசாமி,திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசியா கேண்டி நிறுவன பணியாளர் நந்தினி நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை மெக்சிதா தொகுத்து வழங்கினார். முன்னதாக நிறுவனபணியாளர்களுக்கு மே தின போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.