மே தினம் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம்
கோவில்பட்டி செல்ல பாண்டியன் நகர் புகுண காந்தாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் மே தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜு எம் எல் ஏ தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் எம் ஆர் வி கவியரசன் கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
தீப்பெட்டி கூலித் தொழிலாளர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் விழா கமிட்டி சார்பில் கவுகரிக்கப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் முருகேசன் பாண்டியன் ரத்தினவேல் கண்ணன் மாரிமுத்து, கீழ தேமுதிக செயலாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.