• June 8, 2025

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

 கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

  புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜேஸ்வரி 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார் 18 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

   முகாமில் நடராஜபுரம் தெரு பொது மக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் செண்பகம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை தலைவர் காளிதாஸ், ஆவல்நத்தம் லட்சுமணன், ஏ ஐ டி யு சி.உத்தண்டராமன், மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார், செவிலியர்கள் மாரியம்மாள், முகேஷ்வரி, ஒருங்கிணைப்பாளர் கணேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *