காதலி கண் முன்னே வாலிபர் வெட்டிக்கொலை : திடுக்கிடும் தகவல்கள்

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(வயது 30). இவர் நேற்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் உணவருந்த சென்றுவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே நேரத்தில் தீபக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். திடீர் தாக்குதலில் சமாளிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜாபரிதாபமாக இறந்து போனார்.
இந்த கொலையை தொடர்ந்து 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலையை நேரில் பார்த்த தீபக் ராஜாவின் காதலி கதறி துடித்தார்.சடலமாக கிட ந்தவரின் உடலைப் பார்த்து அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது ல்
அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாக தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடைபெற்ற இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்
