கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி 14 ஆடுகளுடன் பெண் சாவு

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை இடி மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அந்த சமயத்தில் வடக்கு திட்டங்குளத்தை சார்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஆச்சியம்மாள் (வயது 63) ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீடு திரும்பினார்.
இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் . ஆச்சியம்மாள் ஆடுகளுடன் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின.
மழை ஓய்ந்ததும் ஆச்சியம்மாளை தேடி வந்த உறவினர்கள் ஆச்சி அம்மாளும் ஆடுகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆச்சி அம்மாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
