• May 11, 2024

Month: April 2022

கோவில்பட்டி

ரம்ஜான்: எட்டயபுரம் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தென் மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் வாராந்திர ஆட்டு சந்தை மிகவும் பிரபலமானதாகும். பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இவற்றை வாங்குவதற்கும் வியாபாரிகள் படையெடுத்து வருவார்கள்.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த சந்தை கூடும். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். அந்த வகையில் வர இருக்கிற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று சந்தைக்கு ஆடுகள் நிறைய கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கும் வியாபாரிகள் அதிகம் பேர் வந்தனர்காலையில் இருந்தே […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கடந்த 22-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை திருப்பலி கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.9-ம் நாள் திருவிழாவான இன்று மாலை 6 மணிக்கு புனித சூசையப்பர் திருத்தலத்தில் பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை செல்வின்,அருட்திரு பீட்டர் அடிகளார் டைரக்டர் பாஸ்ட்ர்ல் சென்டர், வல்லம் ஆலய பங்கு தந்தை விசுவாச ஆரோக்கியராஜ் அடிகளார், நாலட்டின்புதூர் பங்கு தந்தை […]

செய்திகள்

தேனி அரசு விழாவில் 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; முதல் -அமைச்சர் வழங்கினார்

தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் இன்று அரசு சார்பில் நடந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.இந்த விழாவில் 114 கோடியே 21 லட்சம் செலவில் முடவடைந்த 40 பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மேலும் 74 கோடியே 21 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினாரஅத்துடன் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, […]

செய்திகள்

அரசு பள்ளியில் மோதல்; 12-ம் வகுப்பு மாணவர் கொலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் கடந்த 25ந்தேதி இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே […]

செய்திகள்

முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருந்த குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் திடீர் கைது

திண்டுக்கல் மாவட்டம், குடகனாறில் முறையாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அந்த ர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. இது குறித்து தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, குடகனாறு பாதுகாப்பு சங்கம் […]

தூத்துக்குடி

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலைகளை தடுக்கும் பொருட்டும், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த 30 நாட்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு இதுவரை கடந்த 4 மாதங்களில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் […]

தூத்துக்குடி

கஞ்சா கடத்தலில் சிக்கியவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த 31.03.2022 அன்று 4 பேரை கைது செய்தனர்.கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த துளசி (வயது 40), ஜேசு எமர்சன் மகன் மரிய அலெக்ஸ் பிரிட்டோ (22), புண்ணிய தாஸ் மகன் பாபு ஷாகுலின் (32), கேரள மாநிலம் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த ஞானாபஸ் மகன் ஜெனிடர் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து […]

தூத்துக்குடி

டிராக்டரில் ஆற்று மணல் கடத்தியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் வேம்பார் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடி எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த டிராக்டரை ஓட்டி வந்த வடக்கு சேவல் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சங்கர் (34) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து டிராக்டர் மற்றும் […]

தூத்துக்குடி

இரவுநேர ரோந்து போலீசாரிடம் சிக்கிய 3 பேர் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாலாஜி சரவணன் உத்தரவுபடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று (29.4.2022) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் விளாத்திகுளம் எம். சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த செண்பகராஜ் (41), விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சேதமடைந்த அரசு அலுவலக ஊழியர் குடியிருப்பை இடிக்கக்கோரி கோட்டாட்சியரிடம் பா.ஜனதா மனு

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு அலுவலக குடியிருப்பு மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உயிர் சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.அந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கட்டிடத்தை இடிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சி நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அவருடன் 20 -வது […]