• May 21, 2024

நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை மாணவ மாணவிகளுக்கு பரிசு 

 நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை மாணவ மாணவிகளுக்கு பரிசு 

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உப தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாடார் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரபிரசாத், பள்ளியின் பொருளாளர் ரத்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாககுழு உறுப்பினர்கள் தாழையப்பன்,பால்ராஜ்,மனோகர்,செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.   இதில் முதலிடம் பிடித்த மாணவர் நவீன்குமார் மற்றும் மாணவி ராஜஸ்ரீ ஆகியோர் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும்,மாணவி ராஜேஸ்வரி 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,மாணவி சரண்யா 479 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 2 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 

முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.அது போல பயிற்றுவித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியை கீதாராணி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *