10 ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு
கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ. வே. அ வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
முதல் மதிப்பெண் 474, இரண்டாம் மதிப்பெண் 471, மூன்றாம் மதிப்பெண் 462 மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2 மாணவர்கள் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இதையொட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் டி. எம்.துரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிச் செயலர் ஆர். வி. எஸ். வேல்முருகேசன் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்