10ம் வகுப்பு தேர்வில் சாதனைபடைத்த கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 312 பேர் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவி நிவாஷனி 491 மதிப்பெண், விஜயலட்சுமி 488 மதிப்பெண்,ரேணுகா 485 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
3 மாணவிகள் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவிகளும் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி 80% ஆகும்.
சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.