• May 21, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 94.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

 தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 94.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மேலும், மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வை 21 ஆயிரத்து 843 மாணவா்- மாணவிகள் எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 20 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.39% ஆகும்.

 வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10,534 மாணவர்கள் எழுதினர். இதில் 9,645பேர் தேர்ச்சி (91.56%) பெற்றுள்ளனர். மாணவிகள் 11,309 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,973பேர் தேர்ச்சி 97.03% பெற்றுள்ளனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *