கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி 10ம்வகுப்பு சாதனை மாணவர்கள்
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 256 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 253 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளியின் தேர்ச்சிசதவீதம் 99% ஆகும்.
மாணவி அனிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,மாணவி காவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவர் லட்சுமணகாந்த் 489 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர்
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபாலன்,பொருளாளர் சுரேஷ்குமார்,பள்ளிச் செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், பொருளாளர் சண்முகராஜ், உறுப்பினர் ஜோதிபாசு, தலைமையாசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் நினைப்பரிசு வழங்கி பாராட்டினர்.