பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் திரையுலகில் உச்சத்தை தொட்டது போல் தமிழக அரசியல் களத்திலும் உச்சத்தை தொட வேண்டும். நாடு முழுவதும் அரசியல் களம் சீரழிந்து வருவதைக்கண்டு மனம் வெதும்பிய நடிகர் விஜய், அதைத்துடைத்தெறியும் முயற்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி காண வேண்டும். கையூட்டு பெறும் […]
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்க்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவியும், மலர் வளையும் வைத்தும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தலைமைக்கழக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,திரளான கழக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து அ. தி. மு. க.அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]
கோவில்பட்டி கடலையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் பாதுகாவலராம் புனித ஜான் போஸ்கோவின் திருநாள் விழாவும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா என இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழா பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி வசந்தா தலைமையில், குத்துவிளக்கின் முதல் திரியை அருட்தந்தை பால்சாமி அடிகளாரும், 10ம்,11ம்,12ம் வகுப்பு மாணவிகள் கபிலவர்ஷினி, ரேவதி, அனுதர்ஷினி மற்றும் எல்.கே.ஜி .மாணவன் ஆண்டனி ஆகியோரும் இணைந்து குத்து […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் சான்று தடையில்லாமல் வழங்கிட தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொருளாளா் பி.கோபாலகிருஷ்ணன் , […]
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்ட்து. இதையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி .ஆர் தொடர்பாக ஆ.ராசா பேசியதை கண்டித்து அதிமுகவினர் ஆ.ராசா படத்துக்கு அவமரியாதை செய்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இது குறித்து திமுக சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கடந்த 25.1.2024 இல் அறிவித்த சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பின்வரும் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்க்கண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கண்ட காவல் துணை ஆய்வாளர்களை உடனடியாக விடுவித்து, பணியிடத்தில் சேரும் தேதியை முன்கூட்டியே […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் அனைத்து வந்கியாளர்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. திட்ட இயக்குனர் வீரபத்திரன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் 1947 ம் ஆண்டு தொடங்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் […]
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர். நெல்லையைச் சேர்ந்த, திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் […]