கடம்பூர் ராஜுவிடம் கம்மநாயுடு மகாஜன சங்கத்தினர் கோரிக்கை மனு

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் சான்று தடையில்லாமல் வழங்கிட தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொருளாளா் பி.கோபாலகிருஷ்ணன் , உப தலைவா் எஸ். எம். ராமசந்திரன் , மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன் , மாநில பிரதிநிதி வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினா்கள் கனகராஜ் , சீனிவாசகம் , குமாா் , சீனிவாசன் , மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனர்.
