புனித ஜான் போஸ்கோ திருநாள் விழா

கோவில்பட்டி கடலையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் பாதுகாவலராம் புனித ஜான் போஸ்கோவின் திருநாள் விழாவும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா என இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
இவ்விழா பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி வசந்தா தலைமையில், குத்துவிளக்கின் முதல் திரியை அருட்தந்தை பால்சாமி அடிகளாரும், 10ம்,11ம்,12ம் வகுப்பு மாணவிகள் கபிலவர்ஷினி, ரேவதி, அனுதர்ஷினி மற்றும் எல்.கே.ஜி .மாணவன் ஆண்டனி ஆகியோரும் இணைந்து குத்து விளக்கு ஏற்றினார்கள்.
பின்னர் சிவகாசி ஆலங்குளம் பங்குத்தந்தை பால்சாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனையடுத்து மாணவ மாணவிகள் நடன நிகழ்ச்சிகளும்,நடப்பு கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரிவு உபச்சாரவிழாவும் நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
