ஆ. ராசா படத்துக்கு அவமரியாதை : கடம்பூர் ராஜூ உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நேற்று அதிமுக சார்பில்
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி .ஆர் தொடர்பாக ஆ.ராசா பேசியதை கண்டித்து அதிமுகவினர்
ஆ.ராசா படத்துக்கு அவமரியாதை செய்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
இது குறித்து திமுக சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.கே.பெருமாள், மோகன் , அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசு,மாவட்ட கவுன்சிலர் சத்யா, கணேசன், பழனி, ஜெயந்தி உட்பட 9 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
