• June 7, 2025

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்

 தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்

இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் 1947 ம் ஆண்டு  தொடங்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம்  தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் குறித்து என்னென்ன ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது என்பது குறித்து மாணவ மாணவிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் விளக்கி கூறினர்

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த  நூற்றுக்கணக்கான மீன் வகைகள் ,கடல் அட்டைகள், இறால் வகைகள், நண்டு வகைகள், கடல்விசிறிகள், கடல் பஞ்சு ,கடல் சங்கு பவளப்பாறைகள், கடல் குதிரை வகைகள் உள்ளிட்டவற்றை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *