• June 6, 2025

Month: July 2022

ஆன்மிகம்

சிவராத்திரியும்… பிரதோஷமும் இன்று …

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. ஆனால் ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமனம்

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக(டி.எஸ்.பி.)இருந்த உதயசூரியன் இடமாற்றம் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது, அவரது பணியிடத்துக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பி.நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டதுஇந்த நிலையில் கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமிக்கபப்ட்டு இருக்கிறார். தற்போது விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் அவர் கோவில்பட்டிக்கு இடமாற்றம் செயப்பட்டு இருக்கிறார்.அவர் விரைவில் கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக் பொறுப்பு ஏற்க உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடந்தது

தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாகடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல பனிமயமாதா பேராலய திருவிழா நடக்கிறது. தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது.இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் பள்ளங்களை மூடும் கண்துடைப்பு பணி

கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு கருதப்படுகிறது. இந்த பகுதி வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும். புதுரோடு என்ற பெயருக்கு ஏற்றபடி இந்த சாலை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வாறுகால் அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் இருக்கும் நிலையில் மறுபுறத்தில் ஒரு இடத்தில் சாக்கடையை சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதனால் புதுரோடு […]

ஆன்மிகம்

ஏகலைவனிடம் குருதட்சனையாக கட்டை விரலை கேட்ட துரோணர்….

அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு பேசுபவர்களிடம் இருந்து வரும். உண்மையில் நடந்தது என்ன..? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது.. ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், […]

கோவில்பட்டி

காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார்.இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து […]

கோவில்பட்டி

கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்; கலெக்டரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குருஸ் திவாகர் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலையில், கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சொரிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்டண திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு […]

கோவில்பட்டி

டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள்: இலவச மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்

கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மாவட்டசெயலாளர் ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றினார். பின்பு கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்க 49-வது மகாசபை கூட்டம்

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கத்தின் 49-வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் சேனாபதி, பொருளாளர் களியோகத்து அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் துணை செயலாளர் லட்சுமணன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக ராமையா செட்டியாறம் திருநெல்வேலி சிதம்பரம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர்சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் (6௦௦-க்கு 552) பெற்ற மாணவி ஞானபொற்கொடி லாவண்யா, இரண்டாம் […]