கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமனம்

 கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமனம்

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக(டி.எஸ்.பி.)இருந்த உதயசூரியன் இடமாற்றம் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது, அவரது பணியிடத்துக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.
கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பி.நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டது
இந்த நிலையில் கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமிக்கபப்ட்டு இருக்கிறார். தற்போது விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் அவர் கோவில்பட்டிக்கு இடமாற்றம் செயப்பட்டு இருக்கிறார்.
அவர் விரைவில் கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக் பொறுப்பு ஏற்க உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *