அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில்,முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பேசியதாவது:-அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல.தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு தண்ணீர் […]
.அதி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.அ.தி.முக.. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் கொல்லம்பரம்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இந்த கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து பேசினார். அப்போது மரங்கள் வளர்ப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் […]
கோவில்பட்டி எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கனரா வங்கி சுழற்கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. போட்டி 4-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.ஆண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ.17.017, இரண்டாம் பரிசாக ரூ. 13,017, மூன்றாம் பரிசாக ரூ.9017, நான்காம் பரிசாக ரூ. 6017 வழங்கப்படுகிறதபெண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ12,017, இரண்டாம் பரிசாக ரூ. 9017, மூன்றாம் பரிசாக ரூ.7017, நான்காம் பரிசாக ரூ.5017 […]
விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் பயன்படுத்தும் அரசு காரின் டிரைவராக இருந்தவர் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று அலுவலகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.பின்னர் அவர் வீட்டுக்கு கிளம்பினார். தினமும் தன்னை வீட்டில் இருந்து அழைத்து வந்த டிரைவர் இன்று பணி ஓய்வு பெற்று செல்லும்போது அவரை கவுரவிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை மேற்கொண்டார்வழக்கமாக தான் அமர்ந்து வரும் முன் இருக்கையில் அந்த டிரைவரை அமரவைத்து டிரைவர் இருக்கையில் கல்வி […]
எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி முட்செடிகளை அகற்றி மரங்கள் வளர்க்க ஏற்பாடு
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சுற்றிலும் முட்செடிகள் வளார்ந்து காடு போல் தோற்றமளிக்கிறது. இதனால் பாம்பு நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவிகள் பயத்துடன் இருந்து வருகிறார்கள்இந்த நிலையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள குறுங்காடுகள் திட்டத்தின் கீழ்எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக்கல்லூரியை சுற்றிலும் வளர்ந்துள்ள களைகளை அகற்றி மரங்கள் நடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சட்டமன்ற […]
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்த உப்பள தொழிலாளி சண்முகராஜ் (வயது 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.ஆவரையூா் அருகே தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் பைக்கில் சென்றபோது, சிலர் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.’சண்முகராஜ் மனைவி முத்துசந்தானம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் சண்முகராஜ் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ,மேலும் ரூ. 5 லட்சம் நிவாரண உதவி […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மயிலேறி (வயது 40). முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் கணவரை இழந்த மகராசி (33) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், மயிலேறி – மகராசி இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த […]
கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(வயது 26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் செல்லத்துரைக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பது வழக்கம். நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அவரது தம்பி முத்துச்செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.இதில் முத்துச்செல்வம் கடுமையாக தாக்கியதில் அண்ணன் செல்லத்துரை […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கைக்கு கடன் உதவித் […]