அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி; கோவில்பட்டியில் பரபரப்பு

 அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி; கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(வயது 26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் செல்லத்துரைக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பது வழக்கம். நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அண்ணனை அடித்து கொன்ற தம்பி


இதைப் பார்த்த அவரது தம்பி முத்துச்செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.
இதில் முத்துச்செல்வம் கடுமையாக தாக்கியதில் அண்ணன் செல்லத்துரை பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இந்த கொலையை தொடர்ந்து முத்துசெல்வம் அங்கிருந்து ஓடிவிட்டார். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் வந்தனர், அவர்கள் செல்லத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முத்து செல்வத்தை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணனை தம்பி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *