கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி
![கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி](https://tn96news.com/wp-content/uploads/2022/06/senthiambalamurder.jpg)
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்த உப்பள தொழிலாளி சண்முகராஜ் (வயது 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆவரையூா் அருகே தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் பைக்கில் சென்றபோது, சிலர் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.’
சண்முகராஜ் மனைவி முத்துசந்தானம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் சண்முகராஜ் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ,மேலும் ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், கவுன்சிலர் கேசவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)