• June 12, 2025
கோவில்பட்டி

கோவில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைப்பெற்றது.இதனையொட்டி மாலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி கோவில் திருவிளக்கு அலங்கரிக்கப்பட்டு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டதுபூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அய்யர் சுப்பிரமணியன், காளியம்மன் கோவில் பூசாரி சுப்புராஜ், கார்த்திக் ஆகியோர் செய்தனர். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி பஸ் நிலைய கடைகளில் கலெக்டர் ஆய்வு; வாழை இலையில் எண்ணெய் பதார்த்தங்களை

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், இன்று (29.7.2022) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு […]

செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; கூட்டம் திடீர் அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவுகிறது, நேற்று முன்தினம் கேரள பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது,மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த போது வெள்ளபெருக்கு அதிகரித்தது. இதனால் அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.இதற்கிடையே வெள்ளத்தில் 5 பேர் சிக்கிகொண்டனர். இதில் 3 பேர் காப்பாற்றப்பட்டனர். 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார்கள். இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று ஆடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி பேசுகையில். “எல்லா உறுப்பினர்களிடமும் அவர்வர் பகுதியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வந்து செல்லும் ரெயில்களின் புதிய நேரம்

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரெயில்நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது. கோவில்பட்டி வழியாக விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இரண்டாவது பிளாட்பாரத்திலும், கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் முதல் பிளாட்பாரத்திலும் தற்போது வந்து செல்கின்றன.கோவில்பட்டி வந்து செல்லும் வெளியூர் ரெயில்கள் நேரம் கடந்த 12 ந் தேதி முதல் மாற்றி அமைக்கபட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு

சிறுகதை

நலம் விரும்பி …சிறுகதை

பிரபலமான நகைக்கடை… நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்…அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் நகை கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பனி அதிகமாக இருந்ததால் காவலாளி தலையில் பனிக்குல்லா மாட்டியபடி நகைகடை கட்டிடத்தை சுற்றி வந்தார்.பனிரெண்டு மணி ஆனதும் காவலாளி மீண்டும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் சேரில்வந்து அமர்ந்தார்.கண்களை தூக்கம் தழுவியது.அதிகாலை 5 மணிக்கு விழித்தவர் எழுந்து கடையை சுற்றிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. கடையின் பின்புறம் கட்டிடத்தில் ஓட்டை போடப்பட்டிருந்து. செங்கல் […]

கோவில்பட்டி

17 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை கண்டுபிடித்து 15 ஏக்கர் தொகுப்பு தேர்வு

கோவில்பட்டி வட்டாரத்தில் 17 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளான பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தரிசு நிலங்களை கண்டறிந்து 15 ஏக்கர் தொகுப்பு அமைத்து ஆழ்துளை கிணறு அமைத்தல், இடுபொருள் வழங்குதல், விவசாய குழு அமைத்து அமைத்தல் போன்ற பயன்கள், அரசு உதவியுடன் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டப்பணி செயல்பாடு குறித்து கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள சின்னமலை குன்று, கடலையூர், குலசேகரபுரம், பாண்டவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி `கோணல்’ பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சாய்ந்த லாரி; போக்குவரத்து கடும்

கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு, மெயின் ரோடு சந்திப்பில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் தடுப்பு சுவர் நேராக இல்லாமல் கோணலாக காட்சி அளித்தது.பாலத்தின் எதிர்புறமும் இதே போல் கோணலாக தான் பாலம் உள்ளது. ஓடை ஆக்கிரமிப்பினால் மக்கள் அனுபவித்து வந்த துன்பத்தை , இப்போது இந்த கோணல் பாலத்தை கடந்து செல்ல அதே துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்துக்கு சாம்பல் பாரம் ஏற்றி […]

தூத்துக்குடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திரதின கொண்டாட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் ஆலோசனை

.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் கலெக்டர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள்

கோவில்பட்டியில் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான், மின்தடை பற்றி கூறி இருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு, பைபாஸ் […]