• June 13, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி வங்கி கடன்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி வங்கி கடன்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.6.2025) சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து காணொலிக் காட்சி மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார். 

நிகழச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

2025-2026 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.1009 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.121 கோடி எய்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றையதினம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு 1406 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி இலக்கீடாக நிர்ணயிக்ககப்பட்டதில் 729 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80.47 கோடி இலக்கீடு எய்தப்பட்டு கடனுதவி வழங்கப்படுகிறது.

பெண்கள் சமுதாயம் முன்னேறும் பொழுது தமிழ்சமுதாயம் முன்னேறும். பெண்களும் தொழில் முனைவோர்களாக மாறும்பொழுது நமது பொருளாதார நிலை உயரும் என்ற அடிப்படையில் மகளிர்களை மையமாகக் கொண்டு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வழங்கப்படுகின்ற கடனுதவிகளை மகளிர்கள் பெற்று நன்றான முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், புதியதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார்

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் .மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா,இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி பெ.மல்லிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.துரைராஜ், உதவி திட்ட அலுவலர்கள் முருகன், கனகராஜ், வெள்ளப்பாண்டியன், வினோதா, சுந்தரமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *