கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் முழுமையாக அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அதிலும் சிலர் கோட்டுக்கு சென்று விட்டதால் பணியில் தடை ஏற்பட்டது.

பின்னர் கோர்ட்டு உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ரயில்வே பாலத்தின் இரண்டு பக்கமும் ஒரு பகுதி வரை போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
எனவே மீண்டும் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே பாலத்தின் இருபுறமும் முழுமையாக அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில்கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் முழுமையாக அணுகு சாலை அமைத்திட வேண்டும், மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
சிபிஐ நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன்,விஜயலட்சுமி,நகரப் பொருளாளர் சீனிவாசன்,நகரக்குழு உறுப்பினர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
