தூத்துக்குடியில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு

. தூத்துக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்தவர் கில்பர்ட் (வயது 73). கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 32 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து அவர் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்தார். திருட்டு நடந்த வீட்டில் தடயங்கள் எதவும் பதிவாகி உள்ளனவா என்று கைரேகை நிபுணார்கள் ஆய்வு மேற்கொண்டனர்..

மேலும், சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி மதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன

