கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடைவிதிக்க கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு […]
துரைமுருகன் ரத்ததான கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. ரத்ததான கழகம் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜானகிராம், ராஜவேல், முகமது அலி, கார்த்திகேயன், பாலமுகுந்தன்,கார்த்திக் முத்து,சஞ்சய்குமார், தேவிமுனியசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை ராஜேந்திரன்,மகேஷ்,காளி,கருப்பசாமி மற்றும் மருத்துவர் துளசி லெட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினர் பாலாஜி, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, அரசினர் சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு சிறுமியர் இல்லம் மற்றும் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-கீழ் பதிவு பெற்று இயங்கி வருகின்றன. பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் […]
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவு, காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட […]
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது நடன புயல் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில், “ எங் மங் சங் ” என்ற படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான […]
தமிழ் புத்தாண்டு மற்றும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உழைப்பாளி ரஜினி மன்றம் சார்பில் மெயின் ரோடு பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா தலைமை தாங்கினார்.உழைப்பாளி ரஜினி மன்றம் தலைவர் இந்துராஜ்,செயலாளர் கதிரேசன்,பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்கள் குமாராசாமி,முத்துமாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் வைரமுத்து,கணேசன்,ஐயப்பன்,ஆவுடையப்பன்,மணி,கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர இணைச்செயலாளர் […]
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,போடுசாமி,அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் நகரச் செயலாளர் […]
கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை தர்மத்துப்பட்டி சாலையில் உள்ள அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்று கூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் மற்றும் நவதானியம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சூரிய பகவானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையை தச்சர் குமார் ஆசாரி முன் நின்று பாரம்பரிய வழக்காறுகளின்படி நடத்தினார். […]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள், அந்த வகையில் கோவில்பட்டியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், […]
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்த காரணத்தினால் தான் என்று கூறி இருந்தார். இந்த தொகுதியில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததான் தான் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக வுடன் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் டி.ஜெயக்குமார் […]