• June 8, 2025

135 வது பிறந்தநாள் : கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

 135 வது பிறந்தநாள் : கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,போடுசாமி,அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் நகரத் தலைவர் காளிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில், மாவட்டச் செயலாளர் துரைராஜ் எஸ்சி/எஸ்டி மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏஐடியூசி பஞ்சாலைத் தலைவர் பரமராஜ் தலைமையில்,சிபிஐ நகரத் துணைச் செயலாளர் முனியசாமி,வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் செல்வம் தலைமையில்,மாவட்ட அவைத்தலைவர் அமிர்தராஜ் பாண்டியன்,ஒன்றிய செயலாளர் ஈஸ்வர பாண்டியன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் லட்சம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்,ஒன்றிய செயலாளர் தேய்வேந்திரன்,மாவட்டக் குழு ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில்,மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுப ப்ரியா,நகரச் செயலாளர் நேதாஜி பாலமுருகன்,செயற்க்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமையில்,நகரச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயா அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வடக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமையில்,மாவட்ட,நகர,ஒன்றிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர்,இளைஞரணியினர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெய்பீம் அறக்கட்டளை தலைவர் தாவீதுராஜா அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் கோவில்பட்டி தங்கம்மாள் கோவில் தெருவில் இருந்து பேரணியாக அம்பேத்கர் சிலைக்கு வந்து,விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் விமல் வங்காளியார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்பிரபாவளவன்,தங்கம்மாள் கோவில் தெரு தங்கத்துரை,ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் கட்சி,பெரியார் அம்பேத்கர் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு,மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றம்  ஆலோசகர் விஜயன் மற்றும் உறுப்பினர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இந்திய அரசியல் சாசன முகப்புரை அனைவராலும் வாசித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.  நிகழ்ச்சியினை தொடர்ந்து தெற்குத்திட்டங்குளம் மகளிர் மன்ற தலைவி ரஞ்சித மணி, கோவில்பட்டி   சமூகநல ஆர்வலர் ராசையா, நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் பவானி, கோவில்பட்டி சமூக நல ஆர்வலர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் தனலட்சுமி, சபரி பாண்டி , பிரியங்கா மற்றும் முன்னாள் தேசிய இளையோர் தொண்டர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.   கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்ற தலைவி கனகம்பாள் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *