• June 7, 2025

ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி பறிப்பு

 ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி பறிப்பு

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவு, காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுடம் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பில் இருந்து பொற்கொடி விடுவிக்கப்பட்டுள்ளார். 



Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *