• June 8, 2025

கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்த தினம் உறுதிமொழி ஏற்பு

 கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்த தினம் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்,

அந்த வகையில் கோவில்பட்டியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், வழக்கறிஞர்கள் முத்துக்குமார்,  ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜசேகரன், பிஎஸ்என்எல் துரை ராஜ், அருள்தாஸ், ஐ என் டி யு சி. பழனிச்சாமி, முருகன், மகேந்திரன்,

மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், ஜெகன், பகத்சிங் ரத்ததானக் கழக காளிதாஸ், வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாடசாமி, இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ்

கோவில்பட்டியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு நகரத் தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் முன்னிலை வகித்தார்இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர் விக்னேஷ் ராஜா நகரச் செயலாளர் வின்சென்ட் வட்டாரத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

\

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *