• June 10, 2025
கோவில்பட்டி

ஆன்லைன் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

தேசியமுற்போக்கு திராவிடகழக பொதுசெயலாளர் பிரேமலதா  உத்தரவின் படி தேமுதிக உறுப்பினர் கார்டு பெறுவதற்க்கு  பயன்படுத்த வேண்டிய லிங்க் https://members.dmdkparty.com/ இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் கோவில்பட்டியில் தனியார் கம்யூட்டர் சென்டரில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம், கயத்தார்,புதூர் பகுதிகளிலும் முகாம் நடைபெற […]

தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி தலைமை தாங்கினார்.மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் உதவி கண்டண்ட் சாந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை  ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அருண்பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் […]

சினிமா

டாக்டர்களின் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. இந்த படத்தை தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘இறுகப் பற்று’ படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். இதனையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்காதநிலையில்,  சமீபத்தில் அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாட்டின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களை துன்புறுத்தும் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி  கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார்,கோவில்பட்டி ஜமாத் […]

செய்திகள்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரிய வியாழன்,பாதம் கழுவும் நிகழ்வுகள் நடைபெற்றது இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதா சால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்  பெரிய வியாழனான இன்று மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்  1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு அப்பம், ரசம் என நற்கருணையை ஏற்படுத்தினார் . […]

செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக., பாஜக கண்டனம்

தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலைய துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. இதையொட்டி அமைச்சர் சேகர் பாபு, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது நினைவிடத்தில் கோவில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன […]

செய்திகள்

சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார். அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சர்ச்சை பேச்சு […]

கோவில்பட்டி

10 நாட்களில் பவுனுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த தங்கம்

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது. இந்த நிலையில் நேற்று விலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கு (GEN-E TRIX 2025) நடைபெற்றது, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி,சட்டத்தை யூகித்தல்,தொழில்நுட்ப வினாடி வினா,தனிநடிப்பு, புதையல் வேட்டை, எலக்ட்ரானிக்ஸ் ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டிகள் நடை பெற்றது. ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி,சிவகாசி,  ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி,விருதுநகர், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், உதயா பொறியியல் […]

கோவில்பட்டி

அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் முன்பு அமலாக்கதுறையை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாவட்ட செயலாளர் துரைராஜ்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,ஐஎன்டியூசி ராஜாசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ்,மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கார்த்தி காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜா,சமூக ஊடக பிரிவு […]