கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி தலைமை தாங்கினார்.மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் உதவி கண்டண்ட் சாந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை
ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அருண்பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் இணைந்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மஞ்சள் நிற அணியும், இரண்டாவது இடத்தை பச்சை நிற அணியும் பெற்றது. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம்,அனைத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


