கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி நிறைவு; ரூ 6 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, புனித ஓம் கல்வி நிறுவனங்கள், சார்பில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வந்தது..

மே 21 அன்று தொடங்கிய புத்தக கண்காட்சி நேற்று ( ஜூன் 9ம் தேதி) நிறைவு பெற்றது. புத்தக கண்காட்சியில் மொத்தம் ரூ. 6 லட்சத்திற்க்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
நேற்று மாலை நடைபெற்ற நடந்த நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்வான வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி ராமலட்சுமி ,கோவில்பட்டி ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி அனன்யா ஆகியோருக்கு தலா 1,000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

புத்தக கண்காட்சி நிறைவு விழாவிற்கு வருகை தந்த சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள் புத்தகங்கள் வழங்கப்பட்டது..புத்தக கண்காட்சிக்கு உதவிய அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தார்.தாங்கினார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 2025 – 26ம் ஆண்டிற்கான தலைவர் பதவி ஏற்க இருக்கும் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கல் முறையில் தேர்வான மாணவிகளுக்கு தலா ரூ1000 மதிப்புள்ள புத்தகங்களையும், நிறைவு விழாவிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் புத்தகங்களையும் பரிசாக வழங்கி பேசினார்.

கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், காந்தி மண்டப பொறுப்பாளர் திருப்பதிராஜா, ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் முருகேசன், புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஆவுடையப்பன், காளிராஜ், ராஜபாண்டி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
