கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி


கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரிய வியாழன்,பாதம் கழுவும் நிகழ்வுகள் நடைபெற்றது இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதா சால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்
பெரிய வியாழனான இன்று மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்
1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு அப்பம், ரசம் என நற்கருணையை ஏற்படுத்தினார் .
2 . தான் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் மற்றவர்களுக்கு பணி செய்யுங்கள் என்று கூறினார்
3. குருத்துவத்தை ஏற்படுத்தினார் குருத்துவம் என்றால் இயேசு தன் சீடர்களுக்கு தான் ஏற்படுத்திய நற்கருணை கொடுக்கும் நிகழ்வு இது எல்லா தேவாலயங்களிலும் குருவானவர்கள் மக்களுக்கு இறை செய்தியை அறிவித்து நற்கருணையை வழங்கி அவர்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதாகும்.
இவற்றை நினைவு கூறும் வகையில் புனித சூசையப்பர் திருத்தலத்தில் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் ,உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து 12 இறை மக்களின் (அப்போஸ்தலர்களின்) பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு அவர்களுக்கு புத்தாடை வழங்கினர். பின்னர் திருப்பலி நிறைவேற்றினார்கள் இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர் .


