கோவில்பட்டியில் இலவச பொதுமருத்துவம், கண் பரிசோதனை முகாம்

சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண் மருத்துவ பரிசோதனை முகாம் யுபி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு காயகல்பம் குளியல் சோப் சேர்மன் காளிராஜன் தலைமை தாங்கினார், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை பரமசிவம், மருத்துவர்கள் பிரபு, விஜயராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் லதா ஸ்ரீவெங்கடேஷ் குத்துவிளக்கு ஏற்றினார்.முகாமை மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் தொடக்கி வைத்தார்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அமுதவல்லி, தொழிலதிபர்கள் அங்கமுத்து, சோலையப்பன், கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் தலைவர் அசோக்குமார், செயலாளர் வேல்முருகன், துணைத் தலைவர் பூல்பாண்டியன்,கோவில்பட்டி சத்ய சாய்சேவா சமிதி நிர்வாகிகள் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர்கள்,பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த பரிசோதனை, இ சி ஜி,கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. .இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
