பருத்தியில் பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க என்ன செய்ய லாம் ?

பருத்தி பயிர் ஒரு பணப்பயிர் .தற்போது தென்மாவட்டங்களில் கரிசல் மண்ணில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பருத்தி செடியில் களை எடுத்து பூக்கும் தருணத்தில் சில இடங்களில் காய் உருவாகும் தருணத்தில் உள்ளது.
சில இடங்களில் அதிகமாக பூக்களும் சப்பைகளும் உதிர்வதை தடுக்க என்ன வழி
பூக்கள் பிஞ்சுகள் உதிர்வதற்கு என்ன காரணம் தெரியுமா?
பருத்தியில் பூ , பிஞ்சுகள் , சப்பைகள் உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
*பருத்தி பயிருக்கு போதுமான.அளவு ஊட்டசத்துகள் குறைபாடு
* போதுமான அளவு ஈரப்பதம் மண்ணில் இல்லாத காரணமாக இருக்கலாம்.
* பருத்திபயிரின் சுற்றுச்சூழல் ,மற்றும் மரபியல் சார்ந்த காரணமாகவும் பூக்கள் உதிரும்.
* பருத்தியில் ரகத்திற்கு ரகம் அப்சிலிக் அமிலத்தின் அளவை குறிப்பிட்ட அளவிற்கு மேல் காய்கள் உதிர்கின்றன.
*போதுமான தழைசத்து இல்லாத நிலை மட்டுமல்ல சூரிய வெப்பம் அதிகமாக இருந்தால் பூக்கள் உதிரும்
* குறிப்பிட்ட இடைவெளியில் பருத்தி செடிகள் இல்லாத நிலையால் போதுமான காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தாலும் பூக்கள் உதிரும்
பூக்கிற பூக்கள் அத்தனையும் காய்களாகும் ? இல்லையா ?
பருத்தி செடியில் பூக்கின்ற பூக்களும் காயாக மாறுவதில்லை 50% பூக்கள் உதிர்ந்தாலும் ( கொட்டினாலும் ) மகசூல் இழுப்பு எற்படாது.ஆனால் 50% மேல் உதிர்ந்தால் மகசூல் இழப்பு எற்படுகிறது,..
பூக்கள் பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்.
* பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்
*மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது இலைவழிதெளிப்பாக நாப்தலின் அசிட்டிக் அமிலம் என்ற பிளோனோபிக்ஸ் 40PPM மருந்தை 60 வது மற்றும்90வது நாளில் ஓரு லிட்டர் தண்ணீரில் 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பூக்கள், , மொட்டுகள் உதிர்வது குறைக்கபட்டு அதிகமான காய்கள் பிடிக்கும்.
* TNAU COTTON PLUS.( பருத்தி பிளஸ் )
TNAUவின் கண்டுபிடிப்பான CROP BUSTER) தான் இந்த காட்டன் பிளஸ்
எக்கருக்கு 2.5 கிலோ விதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணத்திலும் 2தடவை இலைவழியாக தெளிக்கலாம்.இவ்வாறாக தெளிப்பதால் பருத்தி செடிக்கு தேவையான ஊட்டசத்துகளும் நுண்ணூட்ட மும் கிடைப்பதால் பூக்கள் உதிர்வது குறைவதுடன் மகசூல் 15-18% கூடுதலாக கிடைக்குமென ஆய்வுகள் உள்ளன. அத்துடன் இல்லாமல் அனைத்து காய்களும் ஓரே சீராக வெடித்து அறுவடைக்கு தயாராக இருக்கும்..
தேவைப்படுவோர் அருகேயுள்ள வேளாண் அறிவியல் மையத்தை நாடலாம்.
பருத்தி காய்ப்புக்கு வந்த பிறகு பருத்தி முடியும் வரைவிவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடிய தால் அதிகமாக பருத்தி சாகுபடியை மற்ற பயிர் சாகுபடி விட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
