கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
![கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா](https://tn96news.com/wp-content/uploads/2024/12/ed34ee64-442a-48d1-b20b-90e6318d62d9-1-850x560.jpeg)
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்திரா நகரில் உள்ள சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரிஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைக்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். என்ஜினியர் சந்தனராஜ்,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமக்குடி நர்சிங் கல்லூரி முதல்வர் பொன் திலகவதி அனைவரையும் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா ஆண்டறிக்கை வாசித்தார்
ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ்,தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்து பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
மகிழ்வோர்மன்ற நிர்வாகிகள் மோகன்ராஜ், வெள்ளைச்சாமி,உள்பட கோவில்பட்டி, பரமக்குடி, சொர்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நர்சிங் கல்லூரி ஆசிரியை பூபதி நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)