கோவில்பட்டி ஜி.வி.என்.கலைக்கல்லூரியில் கேம்பிரிட்ஜ்ஆங்கிலமொழித்திறன் விழிப்புணர்வுநிகழ்ச்சி

கோவில்பட்டியில் ஜி. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் ஆங்கிலத் துறை, சார்பில் கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழித் திறன் சான்றிதழ்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் தாமோதரன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம், கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழித் திறன் சான்றிதழ்களின் பயன்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது மற்றும் தங்கள் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உதவுவது ஆகும்.
ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர். எஸ்.டி. செல்வசுந்தரி, வரவேற்புரையுடன் நிகழச்சி தொடங்கியது.
டாக்டர். எஸ்.டி. செல்வசுந்தரி தனது உரையில், ஆங்கில தொடர்புத் திறன்களின் அவசியத்தையும், கேம்பிரிட்ஜ் சான்றிதழ்கள் சர்வதேச அளவில் ஒரு தரமான சான்றாக மாணவர்களின் திறனை நிரூபிக்க உதவுவது என்றும், தொழில் சந்தையில் மாணவர்களின் தகுதியை உயர்த்துவது பற்றியும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் சிறப்புரை வழங்கியவர்களில் செட்ரிக் பெர்னார்ட் (வணிக மேம்பாட்டுத் தலைவர்) மற்றும் ரிக்கார்டோ கேமோன்ஸ் (சென்னை எபெக் மொழி ஆய்வகத்தின் தலைமைத் தேர்வாளர்) ஆகியோர் இடம் பெற்றனர்.
அவர்களின் உரைகளில் கேம்பிரிட்ஜ் மதிப்பீடுகள் மற்றும் சான்றிதழ்களின் விதிமுறைகள், தேர்வு அமைப்பு, மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
செட்ரிக் பெர்னார்ட், நவீன வேலை சந்தையில் ஆங்கிலத்திறனின் முக்கியத்துவத்தை விளக்கினார். அவர், மாணவர்கள் கேம்பிரிட்ஜ் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வேலை நேர்காணல்களில் முன்னிலை பெற்றதுடன், உலகளாவிய சூழல்களில் தங்களின் தொடர்பு திறனை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.
ரிக்கார்டோ கேமோன்ஸ், தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் , மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் வல்லுநர்களின் தெளிவான பதில்களுக்கும் இடையே உரையாடல் நடந்தது.. மாணவர்கள் சான்றிதழ் பதிவு நடைமுறை, தேர்வு தயாரிப்பு மற்றும் அதன் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம் பற்றிய தெளிவுகளைப் பெற்றனர்.
ஐக்யூஏசி உதவி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.,
