மயில்களால் எற்படும் பயிர் சேதத்தை தடுப்பது எப்படி ?

தற்போது வேளாண்மை சாகுபடியில் பெரும் பிரச்சினையாகவும் சவாலாக வும் இருப்பது வன விலங்குகள் தான்.
பாடுபட்டு உழைத்த விளைபொருளைகளை நாசம் செய்வதில் பூச்சி/ நோய்களை விட வன விலங்குகள் ( காட்டுப்பன்றி, யானை, மயில், முயல், பறவைகள் ) தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
இதில் குறிப்பாக மயில்களின் தொந்தரவு விதைப்பில் இருந்து ( மண்ணில் உள்ள பருப்பை கொத்தி உண்ணுதல் ) விளைப்பொருள் அறுவடைசெய்யும் வரை பெரிய பாதிப்பு எற்படுகிறது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மயில் களால் எற்படும் சேதங்களை குறித்து விவசாயிகள் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்த நிலையில் மற்றொரு புறம் அதிகமாக மயில்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மயில் களின் எண்ணிக்கை கணக்கிட வனத்துறை முடிவு செய்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மயில்களின் எண்ணிக்கை தமிழக த்தில் மட்டும்கடந்த 20ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்துள்ளது.
மயில் களின் வாழ்விடங்களான ஓடை ஓடப்பு மற்றும் புதர்கள் வன எல்லைபகுதி படிப்படியாக அழியத்தொடங்கியதன் விளைவாக அவை விவசாய பகுதிகளில் உணவுக்காக வந்து விட்டது.
காலநிலை மாற்றத்தால் மற்ற பறவைகள் எல்லாமே பாதிக்கப்பட்ட நிலையில் மயில்களின் எண்ணிக்கை மட்டும் பெருகி இருப்பது அதனுடைய பரவலுக்கு முக்கிய காரணமாகும்
அதுமட்டுமல்லாது அதனுடைய முட்டைகளை உண்ணும் குள்ள நரி , ஓநாய் காட்டு பூனை களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால் மயில் களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது
முன்பெல்லாம் கிராமப்புற ங்களில் உயிர்வேலிகள் இருந்து வந்ததால் மயில்களின் முட்டைகளை மற்ற விலங்குகள் கொத்தி சாப்பிடும் இன்றைய சூழலில் உயிர் வேலிகள் இல்லாத நிலங்கள் தான் அதிகம்.
மயில்களால் பயிரில் எற்படும் சேதங்கள் என்ன?
விதைத்த பருப்பு , தானியங்கள் பழங்கள் தக்காளி காய்கறி பயிர்களை சேதம் உண்டாக்கி அவற்றின் விற்பனையை பாதிக்கும்.
மயில்களை விரட்டிட என்ன வழி ?
1)பட்டாசு போடுதல்
2) நாய்களை வைத்து துரத்துதல்
3) வரப்பு ஓரங்களில் மீன் அமிலகரைசலை தெளித்தல் , அழுகிய முட்டைகரைசலை ஊற்றுதல்
4) பயிர்களின் உயரத்திற்கேற்ப (PLASTICS TAP) கட்டுதல்.
5) பலகுரலில் ஓலி எழுப்புதல்
6) மனித பொம்மை வைத்தல்
7) பளபளப்பான ரிப்பனை குறுக்கும் நெடுக்குமாக கட்டுதல்
மயில் நமது நாட்டின் தேசிய பறவையாகும் அதனை கொல்லுவது வேட்டையாடுவது சட்டபடி குற்றமாகும்..எனவே மயில்களை கொல்லக்கூடாது விரட்டி விட வேண்டும்
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
