கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 11-ம் நாளான நேற்று முன்தினம். மதியம் 3 மணிக்கு மேல் அம்பாள் தபசு கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார்., மாலை 7 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சுவாமி பூவனநாதராக, அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நடைபெற்றது. கோவில்பட்டி மெயின் ரோட்டில் காட்சி கொடுத்தல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாள் தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மாலை 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் திருகல்யாண விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு மேல் யசுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர். வழிநெடுக பக்தர்கள் நின்று வழிபட்டனர், திருக்கல்யாண நிகழ்ச்சியை கோவில்பட்டி ராகம் மீடியா, யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *