கோவில்பட்டி பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா

சந்திராயன்-3 செயற்கைக்கோள் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட துவங்கிய நாளான ஆகஸ்ட் 23ம் தேதியை பாரத பிரதமர் தேசிய விண்வெளி தினமாக கொண்டாட அறிவித்தார்.
இந்தாண்டு முதல்ஆகஸ்ட் 23ம் தேதி(இன்று) விண்வெளி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதர கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய விண்வெளி தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்.கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளையும் வழங்கி பேசினார்.
மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் கண்ணன், பொற்ச்செல்வி, பொன்மலர்பாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.
