கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி; களை கட்டிய கலைநிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா நேற்று தொடங்கியது. கனிமொழி எம்.பி,தொடங்கி வைத்தார். மே 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் 6 நாட்கள் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முதல் நாள் விழா நேற்று நடைபெற்றது,. இதையொட்டி வார இறுதி நாட்களான 21, 22, 23- ந்தேதி மற்றும் 28,29,30-ந் தேதிகளில் அறிவுறுத்தப்பட்ட படி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி முதல் நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாதொடங்கியது.. கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தங்கினார்.. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் , கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்து பேசினர். கரிசல் இலக்கியங்கள் குறித்தும், அதில் கி.ராவின் பங்கு குறித்தும் எழுத்தாளர் சோ. தர்மன் சிறப்புரை ஆற்றினார்.




தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் பரதம், கரகாட்டம், கோலாட்டம் என கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.
கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, , கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் , தமிழ் அறிஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
