• May 14, 2025

Month: May 2025

செய்திகள்

நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் கடிதம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட அக்கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு […]

செய்திகள்

`தீவிரவாத தாக்குதலுக்குதான் பதில் தாக்குதல் நடத்துகிறோம்’ -அண்ணாமலை

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-  “இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றுள்ளது. துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; அதிகாரிகளுடன் ஆல்பர்ட் ஜான் ஆலோசனை

தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.  அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிர்நாடு ஆல்பர்ட் ஜான்  அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்பர்ட் ஜான்  தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது  மேளதாளங்கள் முழங்க இறை மக்கள் இறை புகழ்ச்சி பாடி கர ஓசை எழுப்பிய வண்ணம் இருந்தனர், பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் கொடியேற்றி வைத்து உலகின் சமாதானம் வேண்டி புறா பறக்க விட்டார். பின்னர்  திருத்தல பங்கு சந்தை சார்லஸ் அடிகளார் பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார், […]

கோவில்பட்டி

தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக  சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம மனிதர்கள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  இவரை கொலை செய்தவர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் விளையட்டு  விழா நடைபெற்றது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நான்காம் ஆண்டு எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி அஞ்சலி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார். இந்திய கப்பற்படை அகாடமியின் பயிற்சி அலுவலர் மற்றும் தேசிய பளு தூக்கும் வீரர் கண்ணுடையார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளிக்கூடங்களின் 282 வாகனங்கள் ஆய்வு

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 306 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 282 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்கள் ஆய்வு கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது  21 வாகனங்களில் பல்வேறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த […]

செய்திகள்

24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி; அரசு ஆணை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு `வீல் சேர்’ நன்கொடை

கோவில்பட்டி நாடார் ஜவுளி ரெடிமேட் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் ரவிக்குமார் , வெயில் முத்து ஆகியோரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்டம் முன்னாள் ரெயில்வே ஆலோசனைக் குழு […]

சினிமா

கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி முத்துக்கருப்பி. இருவரும்  கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு  2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை […]