தூத்துக்குடியை தொடர்ந்து கோவில்பட்டி,விளாத்திகுளத்தில் டைட்டல் பார்க் அமைக்கப்பட உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது கனிமொழி பேசினார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தின்போது வேனில் இருந்தபடி, கூடியிருந்த […]
நியூசிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி 3 பேர் டெல்லியில் பிடிபட்டனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோ போதைப்பொருளை கைப்பற்றினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசார், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்ட மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தை காசிம் என்பவர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இராம.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காசிம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காசிமுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் , இருசக்கர வாகனத்தின் பதிவை ஒரு வருடத்துக்கு நிறுத்து வைத்து […]
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ,பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. . இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், நகரச்செயலாளர் சீனிவாசன் ,ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த அகரம் பகுதியில் ஒரு கோவிலில் விழாவில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் சிலர் பானகம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இதனை கோவிலுக்கு வந்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாத்திரங்களிலும் வீடுகளுக்கு வாங்கிச் சென்று பிள்ளைகளுக்கு கொடுத்தனர். .பானகம் குடித்த சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எனினும் மீண்டும் மீண்டும் அதே […]
கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் .வெங்கடேசன் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர், மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துறையினர் சேர்ந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடத்தினார்கள்.இனாம்மணியாட்சி ஜங்ஷனில் தொடங்கி,கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், புது ரோடு இறக்கம், எம்.எல்.ஏ. ஆபீஸ் ஜங்ஷன் வழியாக கிழக்கு பார்க் ரோடு வந்து மேற்கு காவல் நிலையத்தில் அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தது.நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த அணிவகுப்பில் 140 -க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறை […]
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2014 ம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது, இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் […]
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் 58-வது பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளன்று பத்திரகாளி அம்மன் கோவில் மாதர் சங்கத்தினரால் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது, 8ம் நாளான இன்று காலை முச்சந்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் குடி அழைப்பும் அபிஷேக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து அக்னிசட்டி திருவீதி உலா, உச்சிகால பூஜை நடைபெற்றது. இரவு […]
தற்காலிக, நிரந்தர உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட […]
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஆணையாளர் கமலா மற்றும் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதன் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது, இதில் நகராட்சி செயற்பொறியாளர் […]