கோவில்பட்டியில் டைட்டல் பார்க்; தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

 கோவில்பட்டியில் டைட்டல் பார்க்; தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடியை தொடர்ந்து கோவில்பட்டி,விளாத்திகுளத்தில் டைட்டல் பார்க் அமைக்கப்பட உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது கனிமொழி பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தின்போது வேனில் இருந்தபடி, கூடியிருந்த மக்கள்மத்தியில் கனிமொழி பேசியதாவது:-
இந்த தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல் இந்த நம்முடைய உரிமைகளை மீட்க மற்றும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். எப்படி நீட் தேர்வு கொண்டு வந்து மருத்துவ படிப்பில் சேர விடாமல் தடுத்தார்களோ, அதே போல் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து கல்லூரியில் சேரும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படும்.

நம்முடைய முதலமைச்சர், பெண் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கப் போகும்போது புதுமைப்பெண் திட்டம். அதே போல் இளைஞர்கள் கல்லூரியில் படிக்க வேண்டும் என அவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இந்த நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது. விவசாயிகள் உரிமைகள், பெண்கள் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்.


ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 13 பேரை சுட்டுக்கொன்றது அதிமுக ஆட்சி. பாஜகவும் அதிமுகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடாது என்று போராடியது, நமது முதலமைச்சர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தது போல ஸ்டெர்லைட் ஆலையை மூடினார். இதனால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்றெல்லாம் கூறினீர்கள், இல்லை அதற்கு மாறாக உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையான வின்பாஸ்ட் ஆலையை தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை என்ற வாக்குறுதியும் நம் முதலமைச்சர் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் டைட்டில் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய பகுதிகளிலும் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் உரிமை தொகை ஒரு கோடி 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு விடுபட்டவர்களுக்கு முகாம் அமைத்து வழங்கப்படும்.
குறுக்குச்சாலை பகுதியில் புதிய பாலம் கட்டி தரப்படும். நாடாளுமன்ற சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் சமுதாய நலக்கூடம். பறை பயிற்சி அளிக்கப்பட்டு நெய்தல் திருவிழாவில் பங்கேற்றனர்.33 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 500 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம். விரைவாக நடைபெற்று வருகிறது. விரிவாக முடிக்கப்பட்டு அத்தனை கிராமங்களும் பயன்பெறும் வகையில் அந்த திட்டமும் உங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *