தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்” தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர் எனக்கு நெருங்கிய நண்பராக விஜய்காந்த் இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு மோடி […]
மரணம் அடைந்த தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.தமிழ் நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து வருகிறது. நாளை காலையில் இருந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது . இதயத்தொடர்ந்து அங்கு ஏற்பாடுகள் விமானமாக நடைபெற்று […]
விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக சரியாக பயன்படுத்தி கொண்டவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்குவது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் அரசியலுக்கு […]
மறைந்த விஜயகாந்த், சினிமாத்துறையில் வரலாற்று சாதனை படைத்தவர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். சிறு வயது முதலே சினிமாமீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்து வந்து அதுபற்றி விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை […]
.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தே.மு.தி.க.நிறுவனர் விஜயகாந்த் அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் குணம் அடைந்து கடந்த […]
கோவில்பட்டி அருகே உள்ள படா்ந்தபுளி தோணுகால் மேலத் தெருவை சோ்ந்தவர அய்யனாா் (வயது 28). கோவில் பூசாரியான அவரிடம், கடந்த ஜூன் 10-ஆம் தேதி 3 பவுன் சங்கிலி, கைபேசி மற்றும் ரூ.11 ஆயிரத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரத்தை சோ்ந்த கிஷோா்குமாா் மகன் அருண்குமாா் (19), அதேபகுதி 8-வது தெருவை சோ்ந்த தா்மராஜ் மகன் பரமேஸ்வரன் (24), தூத்துக்குடி பி அன் டி காலனியை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா (30) […]
மழை..சோ.. என்று பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது.தெருக்களில் தண்ணீர் பெருகி ஓடியது. சாதாரண மழை என்று எல்லோரும் நினைக்க நேரமாக நேரமாக மழை நீடித்துக்கொண்டிருந்தது. இரவு ..நெருங்க..நெருங்க..இடியுடன் மழை கொட்ட..இன்னும் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று நினைத்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே இருட்டு..வழக்கம் போல் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று காத்திருக்க..மின்சாரம் வரவில்லை. என்னாச்சு..கரண்டு வரலை..எங்கேயும் டிரான்ஸ்பார்மர் வெடிச்சுட்டா..? பலரும் பலவிதமாக பேச..வீடுகளில் மெழுகுவர்த்திகள் மின்னத் தொடங்கின. […]
தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சி முகமை) ஐஸ்வர்யா ராமநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிறு வயதில் இருந்து ஐ.ஏ.எஸ். பணி மீது ஆர்வம் கொண்டு படித்து தனது ஆசையை நிறைவேற்றியவர். பண்ருட்டி அருகே மருவூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன்-இளவரசி தம்பதியரின் மகள். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு அக்காள் உண்டு. தந்தை ராமநாதன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் இளவரசிக்கு சிறுவயதில் திருமணம் முடிந்துவிட்டதால், திருமணத்துக்கு பிறகு படித்து பட்டதாரி அரசு பணிக்கான […]
கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கும் பணி;
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, சில அமைப்புகளின் போராட்டம் காரணமாக மேம்பாலத்துக்கு பதிலாக சுரங்க பாலம் அமைக்கப்பட்டது. இது கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் மழைக்காலத்தில் சுரங்க பாலத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து சாக்கடை ஊற்று பெருகி சாலையில் ஓடுவது வாடிக்கையாகி விட்டது. ரெயில்வே சுரங்க பாலம் என்பது நாளடைவில் சாக்கடை பாலம் என்று அழைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை_திருவிழா ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.காலை 3:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடந்தது.4 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.காலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜை, காலை 5:30 மணிக்குகோ பூஜை, மகா தீபாராதனை (தாண்டவ தீபாராதனை) நடந்தது.காலை 8 மணிக்கு மேல்சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் மூர்த்தி திருவீதி […]