மழை வெள்ளத்தில் உயிர் இழந்த 22 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு உதவிதொகை; உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உயிரிழந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகை, வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித்தொகையை என மொத்தம் 38 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நிவாரண உதவித்தொகைகளை கனிமொழி எம்.பி. முன்னிலையில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது அமைச்சர்கள் பி.கீதா ஜீவன் , அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.காந்தி, பி.மூர்த்தி,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ,
பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
