இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது ஆண்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது ஆண்டு விழா கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் கொண்டாடப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தின் முன்பு உள்ள கட்சி கொடிக்கம்பத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன் கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நகர துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சிதம்பரம்,ராஜு, செந்தில் ஆறுமுகம், தாலுகா குழு உறுப்பினர்கள் சிவராமன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
